தமிழ்நாடு செய்தி துறையினர் யூனியனின் ஆண்டு விழா.
தமிழ்நாடு செய்தி துறையினர் யூனியனின், 5ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி, சென்னை கொளத்தூர் குமரன் நகரில், தமிழ்நாடு செய்தித் துறையினர் யூனியன் சங்க தலைவரும், மக்கள் காவலர் செய்தி துணை ஆசிரியர் ஸ்ரீதர் முன்னிலையில், பொதுசெயலாளரும் ‘கொளத்தூர் நண்பன்’ சத்யா தலைமையில், குமரன் நகர் நன்னலச்சங்க கட்டிடத்தில், 22ம் தேதி, நிகழ்ச்சி நடந்தது.
அதில், மாநில துணை தலைவர்கள் அகமது அலி, அரசுமலர் பாலமுருகன், மாநில இணை செயலாளர் மகேஷ், சங்க ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ், மாநில செய்தி தொடர்பாளர் மணிவண்ணன், அலுவலக செயலாளர் ஷர்மிளா பாய், சங்க உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ரமேஷ்குமார், பன்னீர்செல்வம், வடசென்னை மாவட்ட தலைவர் ஆரிப், செயலாளர் ராஜேஷ், துணை தலைவர் தமிழ்மணிமாறன், துணை செயலாளர் ‘காவல் டுடே’ சுரேஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீனிவாசன், திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணகுமார், திருநெல்வேலி மாவட்ட தலைவர் தமிழ் உதயம் ஆசிரியர் தாஸ், துணை தலைவர் கோமு.ராஜ், கடலூர் மாவட்ட தலைவர் செய்தி முழக்கம் ஆசிரியர் வேல்முருகன், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் செல்வகுமார், திருப்பூர் மகேந்திரன், கரூர் வடிவேல், நாமக்கல் ஆறுமுகம், தமிழ்ச்செல்வன், கரண்குமார், அப்துல் காதர், சுரேஷ், பாலமுருகன், சைமன் ராஜா, லிங்கமூர்த்தி, ஆனந்த், முரளிதரன், ரமேஷ், மோகன் குமார், அன்பழகன், சண்முகநாதன், ஸ்ரீராம், எட்வின் அன்டனி தாஸ், அகஸ்டின், சிவகுமார், தினகரன், ஹேமந்த் மற்றும் பத்திரிகை நிருபர்கள் உட்பட, தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருந்து வந்திருந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டு சங்க வளர்ச்சிக்கான பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.
மேலும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் செல்வகுமார் நன்றி கூறினார்.


தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள செய்திகளை களமிறங்கி ஆராய்ந்து அலசி அனைத்து செய்திகளையும் வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு போய் சேர்க்க உதவியாய் இருக்கும் என நினைக்கிறேன்